- பன்னாட்டு ஓபன் சதுரங்கப் போட்டி
- வெள்ளம்மாள் பள்ளி
- மாணவர் சாதனை
- சென்னை
- வேலம்மாள் வித்யாலயா
- மேல் அயனம்பாக்கம்
- மகத்தான
- டி.குகேஷ்
- டிவோலி
- புது தில்லி
- வேலம்மாள்
- பள்ளி
- தின மலர்
சென்னை: சென்னை, மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவின் 10ம் வகுப்பு மாணவன் கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் புதுடெல்லியில் உள்ள டிவோலி கார்டன்ஸ் பகுதியில் நடந்த 19வது சர்வதேச ஓபன் கிராண்ட் மாஸ்டர் போட்டி 2022ல், தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். இப்போட்டியில் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று வெற்றியை தக்க வைத்து கொண்டு ஆட்டத்தை தொடர்ந்தார். மொத்தமுள்ள 10 சுற்றுகளில் 8.5 புள்ளிகளை பெற்று தனது நேரடி மதிப்பீட்டை 2614 ஆக உயர்த்தி இறுதி சுற்றில் சதுரங்க சாம்பியன் மாஸ்டர் அபிஜேத் குப்தாவை தோற்கடித்தார். இதன் மூலம் ரூ. 3.5 லட்சம் ரொக்க பரிசு மற்றும் வெற்றி கோப்பையைக் கைப்பற்றினார். இளம் சதுரங்க சாதனையாளரின் சாதனையை பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்….
The post சர்வதேச அளவில் திறந்தவெளி சதுரங்க போட்டி: வேலம்மாள் பள்ளி மாணவன் சாதனை appeared first on Dinakaran.